சென்னையை குளிர்வித்த கோடை மழை...அடுத்த 3 மணி நேரத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
Summer rains lash Chennai Rain in the next 3 hours Meteorological Department Information
சென்னையில் மிதமான மழை பெய்தது .மாதாவரம் ,கோயம்பேடு ,கொடுங்கையூர் ,போன்ற பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது .சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .இதனால் வாகன ஓட்டுகள் சிரமம் அடைந்தனர் .
தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு கடல் பகுதியில் நிலவும் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவு வருகிறதால் தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக புதுவை மட்டும் அல்லாமல் தமிழக பகுதிகளில் இடி மின்னலூடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை ,கடலூர் ,விழுப்புரம் ,மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் கள்ளக்குறிச்சி ,சேலம், புதுப்பேட்டை, சிவகங்கை ,விருதுநகர் , கன்னியாகுமரி , திருநெல்வேலி ,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் மிதமான மழை பெய்தது .மாதாவரம் ,கோயம்பேடு ,கொடுங்கையூர் ,போன்ற பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது .சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .இதனால் வாகன ஓட்டுகள் சிரமம் அடைந்தனர் .வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் அடிக்கடி சாரல் மழை பொழிந்து வருகிறது .இதனால் சென்னை நகர் முழுவதும் குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.கோடைமழையால் மக்கள் மகிச்சியனடைந்தனர்.
English Summary
Summer rains lash Chennai Rain in the next 3 hours Meteorological Department Information