அட பாவி!!! தாய் தங்கையை சுட்டுக் கொன்ற கொடூரன்!!! இவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகுது? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் லூட்டன் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் 19 வயதான பிரோஸ்பர். கடந்த ஆண்டு இவருக்கும், தாய் ஜூலியானா பால்கனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் சற்றும் யோசிக்காமல் திடீரென வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார்.

இவரின் திடீர் கொடூர செயலால் தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.

இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காவலர்கள் நிக்கோலசை கைது செய்தனர்.இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

எனவே நிக்கோலசுக்கு 49 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.இச்சம்பவம் தற்போது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cruel man who shot his mother and sister got punishment as 49 years in jail


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->