திறனற்ற அரசு! டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவதே அரசின் நோக்கம் - கொந்தளித்த ஜி.கே வாசன்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்ததாவது, சட்ட ஒழுங்கை தமிழகத்தில் கட்டு படுத்த முடியாத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் மூல காரணமான டாஸ்மார்க் கடைகளை குறைக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

வருமானத்தை பெருக்க மக்கள் மேலும் குடிப்பதற்கு அரசு உடந்தையாக இருப்பது வேதனை ஆனது. தமிழக அரசால் பல பெரிய குற்றங்கள் நடந்த பிறகும் நடவடிக்கை எடுக்க நினைப்பது என்பது செயல் திறனற்ற அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 

கள்ளச்சாராயம் போதைபொருட்களுக்கு மாணவர்களும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும் அடிமையாகி உயிர்பலி அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நடந்த சம்பவம் இனியும் நடைபெறாமல் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் கூர்ந்து கவனித்து வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil State Congress Party President GK Vasan press meet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->