அசந்து படுத்து உறங்கிய நடத்துனர், ஓட்டுநர்....அரசு பேருந்தை ஆட்டே போட்ட கும்பல்! - Seithipunal
Seithipunal


நீலகிரி அருகே அரசு பேருந்தை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து நேற்று இரவு கரியசோலை என்ற இடத்திற்கு, அரசு பேருந்து சென்ற நிலையில், வழக்கம் போல் இரவு 9 மணிக்கு பேருந்தை  நிறுத்தும் கரியசோலை பேருந்து நிறுத்தத்தில், நிறுத்தி விட்டு பேருந்து ஓட்டுநர் பிரசன்னகுமார் மற்றும் நடத்துனர்  நாகேந்திரன் ஆகியோர் உறங்கச் சென்றுள்ளனர்.

பின்னர் உறங்கி எழுந்து இன்று காலை பார்த்த  போது பேருந்து காணாமல் போனது கண்டு அதிச்சியடைந்தனர். தொடர்ந்து அருகில் தேடிய போது சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, தேவாலா செல்லும் சாலையில் டான்டீ சரக எண் 5 க்குட்பட்ட பகுதியில், சாலையில் நிறுத்தி சென்றது தெரிய வந்தது.

மேலும் பேருந்திற்கு அருகே ஒரு இருசக்கர வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இது குறித்து போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசாருக்கும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நடு இரவில் அரசு பேருந்தை  திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The conductor and the driver who were lying down in shock the gang that drove away the government bus


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->