இன்னும் பருவமழையே வரல அதுக்குள்ள இப்படியா!...25,000 கன அடியை எட்டி ஆர்ப்பரித்து ஓடும் ஒகேனக்கல் காவிரி ஆறு! - Seithipunal
Seithipunal


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கேரெட்டி, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி,பிலிகுண்டு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். அதன்படி கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதனால் நடப்பாண்டிலேயே இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது. மேலும் கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தானது அதிகரித்துள்ளது. அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம், அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்தானது இன்று காலை முதல் 25,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The monsoon has not yet come is it like this hogenakkal Cauvery river that reaches 25000 cubic feet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->