கொடூரமாக வியாபாரி வெட்டிக்கொலை.! மர்ம நபர்களின் வெறிச்செயல்.!
The mysterious persons who brutally hacked the trader to murder in thenkasi
தென்காசி மாவட்டத்தில் வியாபாரியை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் தெற்கு பனவடலிசத்திரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(40) கேரளா திருச்சூரில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் விழாவிற்காக வந்திருந்த மணிகண்டன், நேற்று மாலை பனவடலிசத்திரம் அருகே உள்ள மதுக்கடை பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென மணிகண்டனை கொடூரமாக அறிவாளால் வெட்டியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பனவடலிசத்திரம் போலீசார், மணிகண்டனை அறிவாளால் வெட்டிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The mysterious persons who brutally hacked the trader to murder in thenkasi