சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது உயிரிழந்த பக்தர்.! தென்காசியில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடி பகுதியில் இருக்கின்ற, பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தற்போது சூரசம்ஹார நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் விமரிசையாக நடந்தது. 

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். இந்த சூழலில், கருப்பசாமி என்ற நபர் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இருக்கின்றார். 

தென்காசி பகுதியில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் கருப்பசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகைய நிலையில், கருப்பசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thenkasi devotee died in soorasamhara


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->