திருவள்ளூர்: பள்ளி விடுதியில் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.!!
thiruvallur 12th class student suicide
திருத்தணி அருகே தக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசனம். இவரது ஒரே மகள் சரளா (வயது 17). இவர் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை மாணவி சரளா வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து, விடுதியில் இருந்த சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சக மாணவிகள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து திருவள்ளூர் துணை காவல் சூப்பரண்ட் சந்திர தாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவல் அளிக்கவில்லை என கூறி மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
thiruvallur 12th class student suicide