நேருக்கு நேர் மோதிய வேன்-கார்: 3 பேர் பலி.!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி என்ற பகுதியில் சுற்றுலா வேன் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணம் செய்த நான்கு பேரில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், சுற்றுலா வேனில் பயணம் செய்த 18 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த கோரா விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த 3 பேரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

தொடர்ந்து போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples died for accident in theni


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->