தேனியில் சோகம் - நேருக்கு நேர் மோதிய வேன்-பேருந்து - 3 பேர் பலி.!
three peoples died for accident in theni
கிருஷ்ணகிரியில் இருந்து சபரிமலை நோக்கி பக்தர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதேபோல் சபரிமலையில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு ஓசூருக்கு திரும்பிய வேன் ஒன்று தேனி அருகே சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு எதிர்பாராத விதமாக வேன் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கியதில் இரண்டு வாகனத்திலும் பயணம் செய்த பக்தர்கள் பலத்த காயத்துடன் விழுந்துகிடந்தனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.
அவர்களின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples died for accident in theni