பெற்றோர்களே கவனம்! கொழம்பு குண்டானில் சிக்கி கொண்ட குழந்தை!
three year old child stuck in a vessel in Tondiarpet
தண்டையார்பேட்டையில் பாத்திரத்தில் அமைந்தபடி விளையாடிக் கொண்டிருந்தது மூன்று வயது குழந்தை பாத்திரத்தில் சிக்கிக் கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மூன்று வயது மகன் நிகிலேஷ். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்த அலுமினியம் பாத்திரத்தில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது.
குழந்தை எதிர்பாராத விதமாக அந்த பாத்திரத்தில் சிக்கிக்கொண்டு அழுவதை பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் இடுப்பு முழுவதும் அலுமினிய பாத்திரத்தில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் குழந்தை கதறி அழுத்ததை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் இணைந்து குழந்தையை மீட்க நீண்ட நேரம் போராடியும் முடியவில்லை. இதனால் குழந்தையை மீட்பதற்காக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் அங்கு விரைந்த சத்தியமூர்த்தி நகர் தீனைப்புத்துறை வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையை பாத்திரத்தை வெட்டி சிக்கி இருந்த குழந்தை பத்திரமாக மீட்டனர்.
குழந்தைமக்கு எந்தவித காயமும் இன்றி பாத்திரத்தில் இருந்து மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பாத்திரத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
three year old child stuck in a vessel in Tondiarpet