மாணவிகள் மீது ஆசிட் வீச்சு: இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை! - Seithipunal
Seithipunal


மதுரை, கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் குற்றவாளியான சங்கரநாராயணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2014ஆம் ஆண்டு மதுரை, திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல்லூரி மாணவர்கள் 2 பேர் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். 

இதில் 2 மாணவிகளும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சங்கரநாராயணன் என்ற இளைஞரை அவரது தந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் ஒப்படைத்தார். 

இதனை தொடர்ந்து சங்கர நாராயணனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி பின் கைது செய்தனர். 

இந்நிலையில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கரநாராயணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Throwing acid female students Youth 22 years jail


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->