கொலைகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்காது! தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது - அமைச்சர் ரகுபதி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாகத்தான் இருக்கிறது என்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படுகொலை, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை, சேலத்தில் அதிமுக பிரமுகர் படுகொலை என தமிழகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு, பாமக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வார ராசிபலன் சொல்வது போல், இந்த வாரத்தின் கொலை நிலவரம் இன்று பட்டியலை செய்தி தாள்கள் வெளியிடும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும், தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தில் தற்போது நடைபெற்றிருக்கும் கொலைகள் அரசாங்கத்தால் ஏற்பட்டது இல்லை. ஒருவருக்கொருவர் மீது உள்ள முன்பகை, போட்டியின் காரணமாக கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இதற்கெல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது. மேலும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதற்காக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக இருப்பதால்தான், தொழில் செய்வதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Minister Ragupathy sat TN Govt Law and Order aug


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->