கண்ணியத்துடன் நடத்த வேண்டும் - ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை பிறப்பித்த ஆணை! - Seithipunal
Seithipunal


மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று, ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் போது, ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கண்ணியத்துடன் அவர்களை வழிநடத்த வேண்டும் என்று, ஒரு சில வழிமுறைகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கு மேல் "மாற்றுத் திறனாளிகள்" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் போதும், இறங்கும் போதும் மனிதாபிமான முறையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் அவர்களின் துணையாளர்கள் சாதாரண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகளை பேருந்துகளில் அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் போக்குவரத்து துறை ஆணை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt Traspoert order to Bus Driver and Conductors


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->