நகரசபை கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளாததற்கு காரணம் என்ன?. - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் நடக்கும் நகர சபை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டங்கள் போல் நகர பகுதி சபை கூட்டங்கள் நடைபெறுகிறது. 

இந்தக் கூட்டத்தில் முதன் முறையாக நகர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும் இன்று கூட்டம் நடைபெறுகிறது .

இந்நிலையில், இன்று தாம்பரம் மாநகராட்சி பம்மல் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது, முதல்வர் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today stalin not participate in City council meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->