தடம் புரண்டு ரெயில் பெட்டிகள்: சென்னையில் பரபரப்பு!
train derailment in Chennai
சென்னை, பேசின்பிரிட்ஜ் அருகே பணிமனைக்கு சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டது. இதில் ரயில் பெட்டிகளின் 4 சக்கரங்களும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின.
ரயில் பணிமனை சென்றதால் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனை அடுத்து தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
train derailment in Chennai