திருச்சியிலில் பெரும் பரபரப்பு: 141 பயணிகளுடன் 1 மணி நேரம் வானிலேயே வட்டமடித்த விமானம்! - Seithipunal
Seithipunal


திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

141 பயணிகளுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த விமானம் வானிலேயே வட்டமடித்தபடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமானத்தின் சக்கரம் உள்ளே செல்லாததால் விமானத்தை மீண்டும் தரையில் இருக்க விமானிகள் முயற்சி செய்து வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், விமானத்தில் உள்ள எரிபொருளை குறைத்து விட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க விமானிகள் திட்டம் இட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னும் பத்து நிமிடங்கள் வானில் வட்டமிட்ட பிறகு விமானம் தரையிறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy Airport Flight Emergency


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->