திருச்சி | கடமையை தவறிய பெண் போலீஸ் - எஸ்.பி. யின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போன காவலர்கள்! - Seithipunal
Seithipunal


திருச்சி, சிறுகனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் காவல் நிலையத்திற்கு வந்து மக்கள் கொடுக்கும் புகார்களை சரியான முறையில் விசாரணை செய்வதில்லை என்றும் ரோந்து பணிக்கு செல்வதில்லை என்றும் தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவலர் எஸ் பி இவரை அழைத்து விசாரணை நடத்திய போது, சுமதி முன்னுக்குப் பின் முரணான பதிலை அளித்ததாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் எஸ்.பி ரோந்து பணிக்கு செல்லாமல் காவல் ஜீப் இனிமேல் காவல் நிலையத்தில் நிறுத்தி வைப்பதற்கு தேவையில்லை உங்களுக்கும் தேவையில்லை.

இதனால் அந்த ஜீப்பை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுத்துமாறு உத்தரவிட்டார். உத்தரவின் பெயரில் சிறுகனூர் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த நடவடிக்கையானது கடமையில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் காவல் அதிகாரிகளுக்கும் மற்றும் காவலர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy SP snatched female inspector jeep


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->