சோகம்... தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி.!
two peoples died for drowned water in thamirabarani river
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பேன்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா.
இந்த நிலையில், லாரன்ஸ் சொந்த ஊரான ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளார்.
இதையடுத்து லாரன்ஸ் இன்று காலை ஒய்யாங்குடியில் இருந்து தனது குடும்பத்தினருடன் ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.

அதன் படி அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு பேர் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த உறவினர்கள் ஆற்றுக்குள் இறங்கி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இருவரையும் மீட் மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களையும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------------
English Summary
two peoples died for drowned water in thamirabarani river