ரேபிஸ் நோய் குறித்து வைத்திலிங்கம் எம்.பி கேள்வி.. மத்திய அமைச்சர் பதில்!
Vaithilingam MP questions rabies Union Minister's response!
தெரு நாய்கள், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் வசிப்பது, நாட்டில் அதிக அளவில் ரேபிஸ் நோய் பரவுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது என்பதை அரசு அறிந்திருக்கிறதா? என காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதிலளித்துள்ளார் .
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில் 7ம் தேதி தடுப்பூசி போடப்படாத தெரு நாய்கள், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் வசிப்பது, நாட்டில் அதிக அளவில் ரேபிஸ் நோய் பரவுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது என்பதை அரசு அறிந்திருக்கிறதா?
அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் உலகெங்கிலும் ரேபிஸ் கட்டுப்பாட்டுத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது என்பதை மனதில் கொண்டு, அரசாங்கம் எடுக்கப்பட்ட / எடுக்க முன்மொழியப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
என்று எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலாவது
மக்கள் குடியிருப்புகளில் தடுப்பூசி போடப்படாத தெருநாய்கள் வசிப்பது, நாட்டில் வெறிநாய்க்கடி நோய் அதிக அளவில் ஏற்படுவதற்கு கணிசமான பங்காற்றுகிறது என்ற உண்மையை அரசாங்கம் அறிந்திருக்கிறது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் போர்ட்டலில் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஏற்கனவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 12வது ஐந்தாண்டு திட்டததில் இருந்து நாடு முழுவதும் தேசிய ரேபிஸ் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மேலும் திட்டங்கள் மற்றும் ரேபிஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முன்முயற்சிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை https://nede.mohfw.gov.in/national-rabies-control-programme/ இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என பதில் அளித்துள்ளார்.
English Summary
Vaithilingam MP questions rabies Union Minister's response!