உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண்சிங் கவலைக்கிடம், ஆனால்., - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் கிராம பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நேற்று நடைபெற்றது. இதில், இந்திய ராணுவப் படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த விமானி வருண் சிங்கிற்கு, குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்டு வரும் போது வரும் பொழுது அவருக்கு 80 - 85 சதவீத தீக்காயங்கள் இருந்ததாக மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை மோசமாக இருந்தாலும், அவரின் உடல் பாகங்கள் நன்றாக இயங்கிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். 

இதனையடுத்து, குரூப் கேப்டன் விமானி வருண் சிங்கை உயர் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெருவருகிறார்.

இந்நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும்,  ஆனால் அவர் நிலையாக இருக்கிறார் என்றும், தற்போது உயிர் காக்கும் மருத்துவ அமைப்பில் சிகிச்சை பெற்று வருவதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VARUN SINGH HEALTH info


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->