மது பாட்டிலில் செத்து மிதந்த '' ஈ '' - அதிர்ச்சியில் உறைந்த மது பிரியர்கள்! - Seithipunal
Seithipunal


தென்காசி, வாசுதேவநல்லூர் அருகே உள்ள அரசு மதுபான கடையில் 34 வயது மதிக்கத்தக்க ஒருவர் மதுபாட்டில் வாங்கியுள்ளார். மதுவை குடிப்பதற்காக பாட்டிலை திறக்க முயன்ற போது பாட்டிலில் ஈ, கட்டு எறும்பு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. 

இதனை தொடர்ந்து மது பிரியர் மீண்டும் மதுக்கடைக்குச் சென்று விற்பனையாளர்களிடம், சீல் வைக்கப்பட்டுள்ள மது பாட்டிலில் ஈ, எறும்பு எப்படி செத்து கிடைக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். 

அப்போது மது பாட்டிலில் ஈ, எறும்பு சேர்த்து கிடப்பதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என விற்பனையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். 

இதனால் மது பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மது கடை ஊழியர்கள் அவரை சமாதானம் செய்து வேறொரு மது பாட்டிலை கொடுத்துள்ளனர். 

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் மது பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vasudevanallur Tasmac store liquor bottle dead fly


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->