நான் யார் தெரியுமா? மதுபோதையில் கல்லூரி மாணவர்களை மிரட்டிய போலீசார் - நெல்லையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல்நிலை காவலர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு மானூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், போலீசார் எதிரே உள்ள மேஜையில் சாப்பிட வந்த நான்கு கல்லூரி மாணவர்களை பார்த்து, எதற்காக என்னை முறைத்து முறைத்து பார்க்கிறீர்கள். நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? மரியாதையாக சென்று விடுங்கள். 

இல்லை என்றால் உங்கள் முகத்தை உடைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவர் ஒருவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அப்போது சம்பந்தப்பட்ட போலீசார் கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுப்பில் இருப்பது தெரியவந்தது. மது போதையில் கல்லூரி மாணவர்களுக்கு போலீஸ்காரர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police officer threat to college students while drunk in nellai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->