காலையில் பயங்கரம்... திடீரென வெடித்து சிதறிய பட்டாசு ஆலை! தொழிலாளர்களின் கதி என்ன?
Virudhunagar sattur fireworks factory explosion 3 dead
விருதுநகர், சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்து விட்டனர்.
மேலும் இந்த வெடி விபத்தில் மூன்று அறைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாகவும் மேலும் சில தொழிலாளர்கள் தொழிற்சாலையில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Virudhunagar sattur fireworks factory explosion 3 dead