கணவரின் மது பழக்கம்: 2 குழந்தைகளை தவிக்க விட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் கணவரின் மதுப்பழக்கத்தால் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ். இவருடைய மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மது குடித்துவிட்டு வந்து லட்சுமி உடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று இரவும் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து லட்சுமி வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் லட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife commits suicide in Vellore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->