மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவன்.. மனைவி துணிகரம்..! - Seithipunal
Seithipunal


மது அருந்திவிட்டு தொழில் செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கிருஷ்ணன் தனது மனைவியுடன் ஆவடி அடுத்து உள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் தங்கி 15 ஆண்டுகளாக செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்களின் பிள்ளைகள் தாத்தா பாட்டியுடன் வசித்து வருகின்றனர்.

கிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால்,  தினமும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த விஜயலட்சுமி பெரிய கல்லை போட்டு கிருஷ்ணனை கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife killed her husband near vizhuppuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->