கணவனுடன் தகராறு.. மனைவி செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


குடும்ப தகராற்றால் இளம்பெண் தீவைத்து செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி.  இவருக்கு திருமணமாகி காயத்ரி  என்ற மனைவி உள்ளார். முரளி அந்த பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவதன்று, காலை வழக்கம் போல கடையில் வியாபாரத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால், மன உளைச்சலுக்கான காயத்ரி வீட்டிற்கு சென்று உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார்.  அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman attempts suicide Near cuddalore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->