தினமும் சண்டை.. குடும்ப தகராற்றால் பெண் எடுத்த விபரீத முடிவு.. தர்மபுரி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், குல்லாத்திரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு திருமணாமாகி வளர்மதி  என்ற மனைவி இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

சம்பவதன்று, வழக்கம் போல இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்து வளர்மதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மயங்கி கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Committed Suicide Near Dharmapuri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->