குழந்தை இல்லாத மன உளைச்சலில் பெண் எடுத்த விபரீத முடிவு.. மதுரை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகள் முத்துலட்சுமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் அவருக்கு குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லாத காரணத்தால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Committed Suicide Near Madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->