குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் இளம்பெண் மரணம்.. தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவத்தால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் சம்பூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரின் மனைவி சங்கீதா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் திரும்பவும் அதே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, வயிற்றில் ரத்தம் கட்டி உள்ளதாகவும் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதனால் அவருக்கு இரண்டாவது முறையும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தவிர்க்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

தகவல் அறிந்த உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை மருத்துவமனையில் இதுபோன்ற பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் மருத்துவமனையை தொடர்ந்து இயங்க கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் மருத்துவனைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Death in Selam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->