கணவனுடன் பழகிய பெண்... கொடூரமாக பழிவாங்கிய மனைவி.. தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


கணவனுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை ஆட்களை வைத்து கூட்டு பாலியல்வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கோண்டாபூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவரது கணவர் சிவில் சர்வீஸ் தேர்விற்காக தயாராகி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்தார்.  இதனால், இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது.

இதனை அறிந்த காயத்திரி இருவரையும் எச்சரித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆயினும் அவரது ஆத்திரம் அடங்காததால் அந்த பெண்ணை பழங்கி வாங்க திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி, கடந்த 26ஆம் தேதி  புகாரைத் திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்கலாம் எனக்கூறி அந்தப் பெண்ணை வீட்டிற்கு வார கூறியுள்ளார்.

அந்த பெண்ணும் அவரை நம்பி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பெண்ணை அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான்கு கூலிப்படை ஆட்கள் இருந்தனர். அவர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காயத்ரி அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் காயத்ரி உள்பட 6 பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Sexully abused in Telungana


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->