திருவள்ளூர் || எலுமிச்சை பழம் பறிக்கச் சென்ற இளம்பெண் - நொடியில் மின்சாரம் தாக்கி பலி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரி. திருமணமான இவர் தனது கணவர் சந்தோஷுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் லோகேஸ்வரி, நேற்று வீட்டின் மாடியில் ஏறி இரும்பு கம்பியை கொண்டு, தோட்டத்தில் உள்ள எலுமிச்சை பழத்தை பறிக்க முயன்றார். 

அப்போது, வீட்டின் மாடிக்கு அருகே சென்று கொண்டிருந்த மின்சார கம்பி மீது லோகேஸ்வரி கையில் வைத்திருந்த இரும்பு கம்பி பட்டதால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் படுகாயமடைந்தார்.

 இதைப்பார்த்த, அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், லோகேஸ்வரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைத் தொடர்ந்து லோகேஸ்வரியின் உறவினர்கள் தாழ்வாக சென்ற மின் கம்பியை அகற்றக்கோரி பலமுறை மின்வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும், மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women died for electric shock attack in thiruvallur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->