பிரிட்ஜ் பழுதுபார்க்கச் சென்ற போது சோகம் - நான்காவது மாடியிலிருந்து விழுந்த வாலிபர்.! - Seithipunal
Seithipunal


பிரிட்ஜ் பழுதுபார்க்கச் சென்ற போது சோகம் - நான்காவது மாடியிலிருந்து விழுந்த வாலிபர்.!

சென்னையில் உள்ள பட்டினம்பாக்கம் மற்றும் சீனிவாசப்புரத்தில் உள்ள குடிசை மாற்று குடியிருப்புகளில் இருக்கும் வீடுகள் மிகவும் பழமையானதால் சிதலமடைந்து காணப்படுகின்றன. இதனால், அச்சமடையும் அப்பகுதி மக்கள் வீடுகளை சீர்செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அமல்ராஜ் என்பவர் இல்லத்தில் குளிர்சாதன பெட்டி பழுதடைந்ததால் அதனை சரி செய்வதற்காக மெக்கானிக்கை வரவழைத்துள்ளார். அந்த மெக்கானிக் குளிர்சாதன பெட்டியை சரி செய்வதற்காக நான்காவது மாடிக்கு சென்றுள்ளார். 

அப்போது திடீரென பால்கனி இடிந்து விழுந்துள்ளது. இதில் அந்த மெக்கானிக் கீழே விழுந்து பலத்தக் காயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிர்சாதன பெட்டியை பழுது பார்க்கச் சென்ற வாலிபர் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man injured for building explossion in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->