செங்கல்பட்டு: மனவேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் மனவேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளுர் மாவட்டம் ஆமூரைச் சேர்ந்தவர் ஏசுநாதன். இவரது மகன் சஞ்சய்குமார்(வயது27). இவர் மாமல்லபுரத்தில் ஜிம் நடத்தி வந்தார். இந்நிலையில் சஞ்சய்குமாருக்கு கடன் பிரச்சினை இருந்ததால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சஞ்சய்குமார், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிலையம் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு போலீசார் உயிரிழந்த சஞ்சய் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து செங்கல்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man suicide in Chengalpattu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->