இன்ஸ்டாகிராமில் பெண் போல பேசி மோசடி! பணநெருக்கடியால் இளைஞர் எடுத்த முடிவு! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளபக்கமான இன்ஸ்டாகிராமில் பெண் போல பேசி ஆண்களிடம் பணம் மோசடி செய்த இளைஞர் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர் நத்தக்காட்டு வீதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். பாஸ்கரன் பெண் போல பேசி ஆண்களிடம் பணத்தை மோசடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆகாஷ் மற்றும் சிலரிடம் பெண் போல பேசி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பாஸ்கர் ஆண் என்பதை தெரிந்து கொண்ட பணம் கொடுத்து நபர்கள் பணத்தை திரும்பி தருமாறு பாஸ்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். பணத்தை திருப்பி தருவதாக பாஸ்கரன் தனது உறவினர்களிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மேலும் ஐந்தாம் தேதிக்குள் பணத்தை கொடுத்து விடுவதாக ஆகாசஷிடம் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கேட்ட இடத்தில் பணம் கிடைத்ததால் பாஸ்கரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலையில் அவர் வீடு திரும்பிய போது வீட்டுக்குள் பாஸ்கரனை காணவில்லை என வீட்டில் இருந்தவர்கள் பாஸ்கரனை தேடி உள்ளனர். அப்போது அவர் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாஸ்கரன் தாய்  அளித்த புகாரின் பேரில் கவுந்தப்\பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man who cheated money attempted suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->