தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர் - மின்னல் தாக்கி பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் திருமலை கார்டன் வித்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை மகன் கவின்குமார். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அம்மாபேட்டையை அடுத்த ஜர்த்தல் அருகே வசித்து வந்த கவின்குமாரின் தாத்தா இறந்துவிட்டார். அதன் 3-ம் நாள் துக்க நிகழ்வுக்காக கவின்குமார் தனது தந்தை, தாய், அக்கா உள்ளிட்டோருடன் ஜர்த்தலில் உள்ள தாத்தா வீட்டுக்கு நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார்.

பின்னர் அங்குள்ள காட்டுக்கொட்டாய் என்ற இடம் அருகே காரை நிறுத்திவிட்டு அனைவரும் துக்க வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. 

இந்த நிலையில், நடந்து சென்று கொண்டிருந்த கவின்குமாரை திடீரென மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த கவின்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததுடன் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth died for lightning attack in erode


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->