மின்மோட்டாரை பழுது பார்த்த இளைஞர்... மின்சாரம் தாக்கி பலி.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்மோட்டாரை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராவத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பள்ளிப்பட்டான். இவரது மகன் மணிகண்டன் (21) கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாயிக்கு சொந்தமான வாயலில் பழுதான மின் மோட்டாரை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த ஒயரை எதிர்பாராத விதமாக மணிகண்டன் தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth killed by electrocution in kallakurichi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->