தங்கை முறை கொண்ட மாணவியை காதலித்த இளைஞர்.. உறவினர்கள் துணிகரம்..! - Seithipunal
Seithipunal


தங்கை முறை உள்ள மாணவியை காதலித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், வாளமர்கோட்டை வாண்டையார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்.இவர் அங்குள்ள ஐடிஐ படித்து வருகிறார். இந்நிலையில்,அதே பகுதியை சேர்ந்த +2 மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி அவருக்கு தங்கை முறை என்பதால் ஆந்தின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனை கேட்காமல் ஆனந்த் மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனால், அந்த மாணவியின் அத்தை மகன் ஆனாந்திடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். சம்பவதன்று, இரவு கல்லணைக்கால்வாய் கிளைவாய்க்கால் படித்துறையில் ஆனந்த் அமர்ந்திருந்தார்.

அங்கு சென்ற அந்த மாணவியின் அத்தை மகன் உதயகுமார் அங்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். ஒரு வாக்குவாதம் முற்றவே உதயகுமார் ஆனந்தை சரமாரியாக தாக்கினார். ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் உதயகுமார் மற்றும் மாணவியின் தந்தை ரவி ஆகிய இருவரையும் கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Murder Near Thanjavur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->