#கிருஷ்ணகிரி || குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை.!
Youth suicide in kirishnagiri
கிருஷ்ணகிரியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
கிருஷ்ணகிரி மாவட்டம் பொம்மாண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன்(18). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்காக வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த லட்சுமிநாராயணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சடைந்த நிலையில், இது குறித்து மத்திகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், லட்சுமிநாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth suicide in kirishnagiri