இரவில் சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை! மக்களே உஷார்..தொடரும்! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனடிப்படையில், கே.கே.நகர், வடபழனி, கோடம்பாக்கம், கிண்டி, மயிலாப்பூர் போன்ற சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

புறநகர் பகுதிகளான குரும்பேட்டை, பல்லாவரம், ஆவடி, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களிலும் கனமழை தாக்கம் உணரப்பட்டது. மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சாலைகளின் ஓரங்களில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போரூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நகர்வதை காண முடிந்தது. 

மழை காரணமாக, சென்னையில் இருந்து மும்பை மற்றும் டெல்லி செல்லும் விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. சென்னை விமானநிலையம், நந்தனம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 6 செமீ வரை மழை பதிவானது, மேலும் பெருங்குடியில் அதிகபட்சமாக 8 செமீ மழை விழுந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rain in Chennai at night


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->