தமிழகத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வெயில் குறையும் - வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வெயில் குறையும் - வானிலை மையம் தகவல்.!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடைக்காலம் தொடங்கி இருந்தாலும் சமீபத்தில் பெய்த கோடை மழையால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இருப்பினும், தற்போது கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் காலம் நடைபெற்று வருவதால் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. 

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நேற்று முன் தினம் இருபது மாவட்டங்களிலும், நேற்று பதின்மூன்று மாவட்டங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபான்ரன்ஹீட்டை தாண்டி பதிவானது. 

இந்த நிலையில், இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வழக்கத்தைவிட ஏழு டிகிரி அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 89 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் அதன் பிறகு  வெயில் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தது தகவல் மக்களை சற்று நிம்மதியடையச் செய்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heet decrease in tamilnadu Meteorological Center info


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->