வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தீவிர புயலாக டானா!
TANA Cyclone Alert
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது.
இது தீவிர புயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று உருவானது.
இன்று காலை மத்திய கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகமாறியது.
இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது நாளை காலை காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று, வரும் 23-ஆம் தேதி புயலாக மாறும் என்பரும், 25-ஆம் தேதி அதிகாலை தீவிரப் புயலாக புரி - சாகர் தீவுகள் இடையே கரையைக் கடக்கவுள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.