டெல்டா மக்களே உஷார்... பிப்.1ல் கன மழைக்கு வாய்ப்பு... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு இலங்கை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது வரும் பிப்ரவரி 1ம் தேதிக்கு மட்டும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வை பொருத்து அடுத்தடுத்த நாட்களின் வானிலை எச்சரிக்கையிலும் மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யக்கூடும் என்பதால் தற்பொழுது மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yellow alert to 10 districts for heavy rain on Feb1


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->