காபூல் ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு - 10 பேர் பலி, 8 பேர் காயம் - Seithipunal
Seithipunal


காபூல் ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்துறை அமைச்சகத்திற்கு அருகாமையில் உள்ள ராணுவ விமான நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் நேற்று திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

8 பேர் காயமடைந்து உள்ளதாக தலிபான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபீ தாக்குர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அனைத்து சாலைகளும் மூடப்பட்டது என்று உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு எந்தஅமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த புதன்கிழமை வடக்கு தகார் மாகாணத்தின் தலைநகரான தாலுகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் காயமடைந்து குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 killed 8 injured in blast Kabul military airport in Afghanistan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->