பாகிஸ்தான் : தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் காயம்.!
3 policeman injured in terrorist attacks in Pakistan
பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள குளச்சி காவல் நிலைய எல்லை பகுதியில் போலீசார் மீது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பயங்கரவாதிகள் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக மாவட்ட போலீஸ் அதிகாரி முஹம்மது ஷோயிப் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையினரும் பதில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பி சென்றுள்ளனர். இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து தேரா இஸ்மாயில் கான் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
English Summary
3 policeman injured in terrorist attacks in Pakistan