பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி
6 terrorist died in firing in Pakistan
பாகிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களாக கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் பயங்கரவாதிகள் கொடிய தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட் பகுதியில் தடைசெய்யப்பட்ட டெர்ஹீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அப்பாஸ் போலீஸ் சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து லக்கி மார்வாட் பகுதியின் தாடிவாலா காவல் நிலையம் அருகே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளும் பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்தும், பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடத்திலிருந்தும் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
6 terrorist died in firing in Pakistan