அமெரிக்கா : வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் வீட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா உட்டா மாகாணத்தின் சால்ட் லேக் சிட்டிக்கு தெற்கே சுமார் 245 மைல் தொலைவில் உள்ள சுமார் 8000 பேர் வசிக்கும் ஏனோக் சிட்டியில் ஒரு வீட்டில் காவல்துறை பொதுநல சோதனை நடாத்தியபோது, அந்த வீட்டில் ஐந்து குழந்தைகள் உட்பட 8 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

இதைப்பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சடைந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான எந்த காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த துப்பாக்கி சூட்டால் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஐந்து குழந்தைகளும் அயர்ன் கவுண்டி பள்ளி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்ததாக அதிகாரிகள் தெிவித்துள்ளனர்.

இந்நிலையில் உட்டா லெப்டினன்ட் கவர்னர் டீட்ரே ஹென்டர்சன் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 members including 5 children of family found shot dead home in US


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->