ட்ரம்ப் அரசில் இதுவரை 08 ஆயிரம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது; நடவடிக்கை தொடரும் என அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிராக, டிரம்ப் தலைமையிலான புதிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேர், அமெரிக்க ராணுவ விமானத்தின் உதவியுடன் சமீபத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

நாடுகடத்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இதுவரை 08 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. அத்துடன் இந்த கைது நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்படுகிறது.

ஜோ பைடன் ஆட்சியில், மேற்கொள்ளப்பட்ட தினசரி சராசரி கைது எண்ணிக்கையை விட அதிகரித்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், ஜஸ்பல் சிங் (வயது 29) என்ற இந்தியர் வாஷிங்டன் நகரின் துக்விலா பகுதியில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இவர் பாலியல் தாக்குதல் நடத்தும் நோக்குடன் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மெக்சிகோ, கவுதமாலா மற்றும் எல் சால்வடார் நாடுகளை சேர்ந்த 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 04 பேரும் அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்க துறை அதிகாரிகளின் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சமூகத்தினரை பாதுகாப்பது மற்றும் இதுபோன்ற தாக்குதல்கள் மேற்கொண்டு நேரிடாமல் தடுப்பது ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8000 illegal immigrants arrested under Trump administration


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->