நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தின் பெய்த கன மழை காரணமாக நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சுரங்க தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்கு சுரங்கம் அருகே வீடு கட்டப்பட்டது. இந்நிலையில் கன மழை காரணமாக திடீரென நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் கனமழை காரணமாக அதே பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coal Mine Collapse Accident 5 Workers Died 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->