இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் தினேஷ் குணவர்த்தனே! - Seithipunal
Seithipunal


இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக அனுரா குமார திசநாயகே முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர்.

இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக அபார வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்துஇலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே இன்று பதவியேற்றுக் கொண்டார். . கொழும்புவில் உள்ள அதிபா் செயலகத்தில் அனுரா குமார திசநாயகேக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.


இந்நிலையில் இலங்கை பிரதமராக கடந்த 2022-ம் ஆண்டு முதல் தினேஷ் குணவர்த்தனே இருந்து வந்த நிலையில், அங்கு புதிய அரசு அமைய உள்ளதையடுத்து தினேஷ் குணவர்த்தனே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dinesh Gunawardene resigned as the Prime Minister of Sri lanka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->